சென்னை அருகே நோக்கியா ஆலையில் அடுத்தடுத்து 42 பேருக்கு கொரோனா.. மூடப்பட்ட ஆலை.. பரபரப்பு தகவல்
சென்னை: சென்னை அருகே நோக்கியா ஆலையில் பணியாற்றிய 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோக்கியா ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆலையில் நோக்கியா நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனிடையே ஆலையில் எத்தனை தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை நோக்கியா வெளியிடவில்லை.

நோக்கியாவில் கொரோனா
ஆனால் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரத்தினர், நோக்கியா ஆலையில குறைந்தது 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். கொரோனாவை தடுக்க சமூக விலகல் மற்றும் கேண்டீன் வசதிகளில் மாற்றங்கள் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளதாக நோக்கியா நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.

நோக்கியா நம்பிக்கை
கடந்த சில வாரங்களாக இந்த தொழிற்சாலை கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியது.ஆனால் பணியாளர்களக்கு கொரோனா அதிகமானதால் தற்காலிகமாக ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நோக்கியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்தியா தனது பொருளாதாரத்தை காப்பாற்ற உலகின் மிகப்பெரிய லாக்டவுனை தளர்த்தியுள்ளது. நாங்கள் கட்டுப்பாடுகளுடன் எங்கள் ஊழியர்களுடன் விரைவில் உற்பத்தியை தொடங்குவோம் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தது.

ஒப்போ நிறுவனம் மூடல்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ கடந்த வாரம் டெல்லியின் புறநகரில் உள்ள ஆலையில் மீண்டும் திறந்த நிலையில், அங்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிமாக மூடியுள்ளது. நோக்கியா மற்றும் ஒபோவில் ஏற்பட்ட கொரோனா பரவல் இரண்டு மாத நாடு தழுவிய லாக்டவுனை எளிதாக்குவதற்கான சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

தொடர்ந்து அதிகரிப்பு
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 145,380 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4,167 பேர் இதுவரை கொரோனாவல் இறந்துள்ளனர், இது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஒப்பீட்டளவில் மிககுறைந்த பாதிப்பு ஆகும். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications