அதிமுக தலைமை ஆபீசில் "ஒரு மாற்றம்".. கவனிச்சீங்களா.. எடப்பாடி கைக்குள் முழுதாக சென்ற கட்சி
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் பழைய பேனர்கள் மாற்றப்பட்டு, புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழத் தொடங்கியதில் இருந்து, பரபரப்புக்கு எவ்வித குறையும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது. மே மாதத்தில் தொடங்கிய பிரச்னை, இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கைகள் மாறிமாறி வலுப்பெற்றாலும், தற்போது எடப்பாடி பழனிசாமியின் கைகளே கட்சிக்குள் ஓங்கியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் என்று பல்வேறு மாவட்டங்களுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பில் இபிஎஸ் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகலாவுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்திருந்தார். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

பேனர் கிழிப்பு
முன்னதாக ஜூன் 27ம் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்திருந்தார். அப்போது தலைமை கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. இதன்பின்னர் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இபிஎஸ் பேனரை கிழித்தனர்.

இபிஎஸ் கைகளில் அலுவலகம்
இதனைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, பூட்டப்பட்டது. பின்னர் நீதிமன்ற வழக்கு மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலக சாவியை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய பின்னர், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்து தொண்டர்கள் மத்தியில் தனது பலத்தை நிரூபித்தார். கிட்டத்தட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இபிஎஸ்-ஐ வரவேற்றனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் பேனர்கள் வைக்கப்படாமல் இருந்தது.

ஓபிஎஸ் புகைப்படம் அகற்றம்
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் சேர்க்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவை தெற்கில் பந்தயம் அடிக்கணும்.. செந்தில் பாலாஜிக்கு வேலுமணி செக் -
உதயநிதி கேட்டதில் என்ன தப்பு? - எடப்பாடியை விமர்சித்த சசிகலா.. பழிக்குப் பழியா இது? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
எங்களுக்குள் அண்ணன் - தம்பி சண்டைதான்! ஒரே வேனில் நின்று பிரசாரம் செய்த எடப்பாடி - டிடிவி தினகரன் -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக்












Click it and Unblock the Notifications