அதிமுக தலைமை ஆபீசில் "ஒரு மாற்றம்".. கவனிச்சீங்களா.. எடப்பாடி கைக்குள் முழுதாக சென்ற கட்சி
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் பழைய பேனர்கள் மாற்றப்பட்டு, புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழத் தொடங்கியதில் இருந்து, பரபரப்புக்கு எவ்வித குறையும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது. மே மாதத்தில் தொடங்கிய பிரச்னை, இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கைகள் மாறிமாறி வலுப்பெற்றாலும், தற்போது எடப்பாடி பழனிசாமியின் கைகளே கட்சிக்குள் ஓங்கியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் என்று பல்வேறு மாவட்டங்களுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பில் இபிஎஸ் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகலாவுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்திருந்தார். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

பேனர் கிழிப்பு
முன்னதாக ஜூன் 27ம் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்திருந்தார். அப்போது தலைமை கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. இதன்பின்னர் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இபிஎஸ் பேனரை கிழித்தனர்.

இபிஎஸ் கைகளில் அலுவலகம்
இதனைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, பூட்டப்பட்டது. பின்னர் நீதிமன்ற வழக்கு மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலக சாவியை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய பின்னர், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்து தொண்டர்கள் மத்தியில் தனது பலத்தை நிரூபித்தார். கிட்டத்தட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இபிஎஸ்-ஐ வரவேற்றனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் பேனர்கள் வைக்கப்படாமல் இருந்தது.

ஓபிஎஸ் புகைப்படம் அகற்றம்
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் சேர்க்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications