’அவரை’ தூக்கணும்! தங்கமணியை குறி வைக்கும் ஓபிஎஸ் கோஷ்டி! ஓ அதுக்குத்தான் இந்த பேச்சா? அதிமுக சண்டை!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு களத்தில் இறங்கி இருப்பது எடப்பாடி தரப்பினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே தங்கமணியை புகழேந்தி விமர்சித்தார் என்கின்றனர் விவரம் அறிந்த சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் மட்டுமல்லாது எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக முதல்வராக அறிவிக்கப்பட்ட போது இருந்தே வருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் நாமக்கல் தங்கமணியும், கோவை வேலுமணியும்.
பல இக்கட்டான நேரங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட பல வகைகளில் அவருக்கு ஆதரவளித்துள்ளனர்.அது மட்டும் அல்லாமல் எடப்பாடியின் மனசாட்சி போலவே விளங்குகின்றனர் இருவரும்.

தங்கமணி
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், சட்டசபை தேர்தல், எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல விவகாரங்களில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள். கொங்கு மண்டலம் அவர்கள் கோட்டை ரீதியிலேயே இருவரது செயல்பாடுகளும் கடந்த காலங்களில் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு முழுக்க முழுக்க இருவருமே பின்புலமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதவி அளிக்கவில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் தாங்களாகவே பதவிகளை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மறைமுக நெருக்கடி
இப்படி எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் இருவரையும் தங்கள் தரப்புக்கு இழுக்க முடியாது என தெரிந்து கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மறைமுகமாக அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே எஸ்பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு, எல்ஈடி கொள்முதல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில்தான் நாமக்கல் தங்கமணியை குறி வைத்து இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. அதன் வெளிப்பாடாகவே ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என புகழேந்தி கடுமையாக விமர்சித்து பேசினார் என்கின்றனர் விவரம் அறிந்த சேலம் தரப்பு நிர்வாகிகள்.

பெங்களூர் புகழேந்தி
இது தொடர்பாக நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில எம்எல்ஏக்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள். தங்கமணி மற்றும் வேலுமணி மிகப்பெரிய அளவில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஓபிஎஸ் குறித்து பல தவறான தகவல்களை தங்கமணி கிளப்பி விட்டு இருக்கிறார். தங்கமணி திருந்த வேண்டி இருக்கும் அல்லது திருத்தப்படுவார். என அதிரடி காட்டினார். அது மட்டுமல்லாமல் தங்கமணி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

ஒப்புதல் வாக்குமூலம்
ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் கொள்ளையடித்து நிறைய பணம் சேர்த்து வைத்திருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். தற்போது எடப்பாடி தரப்பு கொள்ளையடித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையை பேசுறவங்க தெய்வத்திற்கு சமம் என்ற ஒரு காமெடி இருக்கும். அதைப்போல இரு தரப்பினரும் கொள்ளை அடித்ததாக மாறி மாறி ஒப்புதல் வாக்குமூலம் போல அளித்து வருவது உண்மையில் அதிமுக மாண்பை அழிக்கும் வகையில் இருப்பதாக அந்தக் கட்சி தொண்டர்களே புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications