விடிவெள்ளியில் வந்த தீர்ப்பு! ஜெயித்துவிட்டோம் மாறா..எல்லாத்துக்கும் ‘அவங்க’ காரணம்! நெகிழ்ந்த ஓபிஆர்
சென்னை : மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் தந்திருப்பது சிறந்த தீர்வு, இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும், தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக தான் பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
Recommended Video
பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை நேற்று நள்ளிரவு தாக்கல் செய்தது.
அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த இந்த மனு மீது நீதிபதிகள் துரைசாமி மற்றும் சந்திரமோகன் அமர்வு நள்ளிரவில் விசாரித்தது.

நள்ளிரவில் விசாரணை
நீதிபதி துரைசாமி வீட்டில் வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவரது வீடு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காரசார வாதங்களை முன்வைத்த நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ஒற்றைத் தலைமை தீர்மானம்
இதன் காரணமாக ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பதால் ஓபிஎஸ் தரப்பு ஆறுதல் அடைந்து இருக்கிறது. இன்று பொதுக்குழுவில் அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களுக்கு நேற்று காலையிலேயே ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்கிவிட்டார். அதில் ஒற்றைத் தலைமை குறித்த கருத்துகள் இல்லை என்ற நம்பிக்கையில் தான் அவர், ஒப்புதல் அளித்தார்.

ஓபிஆர் நெகிழ்ச்சி
இந்த தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கும் நிலையில், தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக தான் பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் கூறியுள்ளார். தீர்ப்பு தொடர்பாக பேசிய அவர்,"மேல் முறையீட்டு வழக்கில் சிறந்த தீர்வு, இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக தான் பார்க்கிறோம்.இன்றைய பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்" என்றார்.

நீதிமன்றத்தில் மேல்முறையீடு
உயர்நீதிமன்றம் நள்ளிரவில் வழங்கிய உத்தரவால் ஓபிஎஸ் தரப்பு ஆறுதல் அடைந்துள்ள நிலையில், தர்மம் வென்றுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் மிகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அதே நேரத்தில் சற்றே எடப்பாடி தரப்பு ஆதரவாக இருந்தாலும், நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம் எனவும், அதிமுகவிற்கு பின்னடைவு என்பதே கிடையாது. இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications