அதிமுக கூட்டணி 147 தொகுதிகளில் வெல்லும்.. திமுக கூட்டணி தோல்வி அடையும்.. ஜேவிசி - டைம்ஸ் நவ் கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக 128 முதல் 147 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்று ஜேவிசி - டைம்ஸ் நவ் கணிப்பை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு சாதகமாக வந்த முதல் எக்ஸிட் போல் இதுதான். இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியது. வாக்கு சதவிகிதம் அடிப்படையில் அதிகரித்திருப்பது போல் இருந்தாலும், கடந்த தேர்தலை ஒப்பிடும் போது சுமார் 23 லட்சம் வாக்குகளே அதிகமாக பதிவாகி இருக்கிறது. இன்று மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நிறைவடைந்த சூழலில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று ஏராளமான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று ஜேவிசி - டைம்ஸ் நவ் போல் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதிமுக 128 முதல் 147 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்களில் வெற்றி பெறும் என்றும், விஜய்யின் தவெக 8 முதல் 15 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான எக்ஸிட் போல்களில் அதிமுகவுக்கு பின்னடைவு என்றே சொல்லப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் எக்ஸிட் போல் வெளியிடும் சில முன்னணி நிறுவனங்கள் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவுக்கு சாதகமாக வந்த முதல் எக்ஸிட் போல் இதுதான். எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில், இந்த எக்ஸிட் போல் முடிவு அதிமுகவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் சரியானதா என்பதை பார்க்க மே 4 வரை காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications