வெய்ட் பண்ணுங்க.. வெய்ட்டா செய்வோம்! ஆதரவாளர்களை தேற்றிய ஓபிஎஸ்! மருத்துவமனையில் போட்ட பக்கா ப்ளான்!
சென்னை : ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தே அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும் அப்போது பல்வேறு தகவல்களை அவர் தனது ஆதரவாளர்களிடம் பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததிலிருந்து நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களும் சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. கட்சியில் தனக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி அதிமுகவில் தனது இருப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தனக்கு எதிராக செயல்பட்ட மூத்த நிர்வாகிகளை தான் நீக்கி விட்டதாகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் தானே தொடர்வதாக அதிரடியாக கூறி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கான விடை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் தான் உள்ளது.

அதிமுக அலுவலகம் சீல்
இதனிடையே அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த நிலையில் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் திருடிச் சென்று விட்டதாக எடப்பாடி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நா ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இருதரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீதிமன்றம் செல்ல வேண்டும்
இது ஒருபுறம் இருந்தாலும் அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்ட பின் அதற்கு உரிமை கொண்டாடுவது என்ற ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது. இதற்காக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இது முடிவடைந்த பிறகு அதிமுகவில் தனக்கு இருக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு ஒன்றிய செயலாளர் ஆகியோரை வைத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. ஏற்கனவே பொதுக்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த அஸ்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தெம்பில் எடப்பாடி
ஆனால் தனக்கு எந்த பிரச்சினையும் வராது கட்சியில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் தங்கள் தரப்பில் இருப்பதால் தெம்பில் இருக்கிறார் எடப்பாடி. பெரும்பான்மை பலம் தனக்கே இருப்பதால் எப்படியும் அதிமுக முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறார். இதனிடையே கொரோனா காரணமாக எதிர்பாராத விதமாக பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேற்றிய ஓபிஎஸ்
இருந்த போதிலும் மருத்துவமனையில் இருந்தவாறு தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் ஓபிஎஸ். தற்போது தங்கள் அணிக்கு எடப்பாடி தரப்பிலிருந்து ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதால் உற்சாகத்தில் இருக்கும் அவர், மேலும் நிர்வாகிகளை இழுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களை அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது தீவிரமாகி இருக்கும் நிலையில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் எனவும். தற்போதைக்கு பொறுமை காத்து நிர்வாகிகள் ஆதரவை பெற்ற பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கலாம். எது செய்தாலும் அசுர பலத்துடன் எதிர் அணியை திணறடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என கூறி இருக்கிறார் ஓபிஎஸ். இதனால் அவரது தரப்பு நிர்வாகிகள் உற்சாகமாக அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications