'ஜெய’லலிதா + ராமச்’சந்திரன்’ = ஜெயச்சந்திரன்! தீர்ப்புக்கு இதுதான் காரணம்? ஜெயபிரதீப் அடடே விளக்கம்!
சென்னை : எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் எனவும், அது தொடர்பாக ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றிருக்கிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து ஓபிஎஸ் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

அதிமுக பொதுக்குழு
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து இதனையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக, அதிமுக கழக நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வாழ்க என வாழ்த்து கோசங்களை எழுப்பியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
![[[ஜெய]]லலிதா [[ஜெய]]லலிதா](https://imagesvs.oneindia.com/ta/img/2022/08/screenshot48080-1660730595.jpg)
[[ஜெய]]லலிதா
இந்நிலையில்எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் எனவும், அது தொடர்பாக ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றிருக்கிறது.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"சத்தியமே ஜெயம்!! இதயதெய்வம் புரட்சித்தலைவி [[ஜெய]]லலிதா அம்மா, இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்[[சந்திரன்]] ஐயா ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும்...

வெற்றி நமதே
‘அவர்களின் ஆன்மா ஏதோ ஒரு ரூபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் உண்மை தொண்டர்களையும் கண் இமை போல காப்பாற்றி, வழி நடத்தும் என்பதற்கு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஐயா உயர்திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினால் நிரூபணம் ஆகியுள்ளது. வெற்றி நமதே!!" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications