பத்மா சேஷாத்ரி "கீதா".. 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை.. போலீஸ் கேட்ட முக்கிய கேள்வி.. பின்னணி!
சென்னை: சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் கொடுமைகள் தொடர்பாக தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டு இருக்கின்றன. அதிலும் போலீசார் நடத்திய இரண்டு நாள் விசாரணையிலேயே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன.
பல பிரபலங்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி.. உயர்தர பள்ளி என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியில் அரங்கேறிய பாலியல் கொடுமைகள் தமிழகத்தை உலுக்கி உள்ளது. அதிலும் அங்கு பணியாற்றி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
மாணவிகளிடம் இவர் தவறாக பேசியது, உடலை தொடும் ரீதியில் பேசியது, தவறாக மெசேஜ் அனுப்பியது, அரை நிர்வாணமாக ஆன்லைன் கிளாசுக்கு வந்தது என்று பல புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

ராஜகோபாலன்
ராஜகோபாலன் ஒரு பக்கம் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளரிடமும் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

விசாரணை
அந்த வகையில் பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதாவிடம் 2வது நாளாக விசாரணை இன்று நடந்து கொண்டு இருக்கிறது. அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. நேற்று கீதாவிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். அதை தொடர்ந்து இன்றும் நடக்கிறது.

கீதா
இதில் கீதாவிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை என்கிறார்கள். முக்கியமாக ராஜகோபாலனுக்கு எதிராக மாணவிகள் புகார் கொடுத்தும் அதில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

பதில் இல்லை
அவரை ஏன் தொடர்ந்து பாடம் நடத்த அனுமதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு கீதா சரியாக பதில் சொல்லவில்லை என்கிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் ராஜகோபாலன் தனது வாக்குமூலத்தில் பள்ளியில் மேலும் சில கருப்பு ஆடுகள் இருப்பதாக கூறி இருந்தார். இவர்களை பற்றி கீதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

யார்?
அதாவது பத்மா சேஷாத்ரி பள்ளியில் வேறு யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இதற்கு கீதா பதில் அளிக்கவில்லை. வேறு யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்கிறார்கள்.

ஆதாரம்
ஒரு பக்கம் ராஜகோபாலனுக்கு எதிராக 30 மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது போக இன்னும் பலரை புகார் செய்ய முன்வரும்படி போலீஸ் கூறி வருகிறது. புகார் அளித்த மாணவிகள் மூலம் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதால் இன்னும் பலர் இதில் சிக்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications