நிம்மதி பெருமூச்சுவிட்ட வேளச்சேரி மக்கள்.. கிண்டியில் பாய்ந்தோடிய மழைநீர்!
சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் குளங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், இன்று பெரும் அளவில் மழைநீர் குளத்திற்கு சென்று தேங்கியுள்ளது. இதனால் வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் மழைநீர் தேங்கவில்லை. எனவே அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கிண்டியில் குதிரை பந்தையம் நடந்த ரேஸ் கிளப் மைதானம் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால் குத்தகைக்கான பணம் முறையாக வசூலாகாததால், அந்த இடத்தை தமிழ்நாடு அரசு கைப்பற்றியது. கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்குவதாலும், ரேஸ் கோர்ஸ் பகுதியை குளமாக மாற்றினால், மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் யோசனை வழங்கியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் குளங்கள் வெட்டும் பணிகள் தீவிரமடைந்தன.

160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் 4.24 மில்லியன் கனஅடி அளவில் 4 குளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு குளம் முழுமையாக வெட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த குளத்தில் நீரை தேக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று மதியம் வரை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் இந்த குளத்திற்கு வந்திருக்கின்றன. இதனால் குளத்தில் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதேபோல மற்ற மூன்று குளங்களும் வெட்டப்பட்டு வருகின்றன. இதன் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன. இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் தென் சென்னையில் கிண்டியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்காது. இதனால் வேளச்சேரி மழை வெள்ளம் பாதிப்பு இல்லாத பகுதியாக மாறும். ஆகவே இக்குளம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் தென் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு தொடங்கி தற்போதுவரை சராசரியாக 25 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 66 மி.மீ மழை பெய்திருக்கிறது. மொத்தமாக சென்னையில் 21 இடங்களில் 15 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அண்ணா நகர் மேற்கில் 15 மி.மீ, அம்பத்தூரில் 5 மி.மீ, கொளத்தூரில் 10 மி.மீ, பெரம்பூரில் 12 மி.மீ, புழல் 4 மி.மீ, மாதவரத்தில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றிரவு முதல் மழை பெய்து வந்தாலும், சென்னையில் உள்ள சுரங்க பாதையில் மழை நீர் தேங்கவில்லை.
மேலும் "அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான பலத்த மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன மிக கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
எனவே, மழைக்கு முன்பாக கிண்டி குளம் தயார் செய்யப்பட்டிருப்பது சென்னை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications