"பெரியாருக்கு காவி" 4 ட்வீட் போட்டு சாட்டையால் அடித்த ராமதாஸ்.. ஈனத்தனம் என ஜெயக்குமாரும் பாய்ச்சல்
தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
சென்னை: தந்தை பெரியார் சிலைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் காட்டமான அறிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ஏதாவது பிரச்சினை என்றால் இப்போதெல்லாம் பெரியார் சிலையை அவமானப்படுத்த ஆரம்பித்து விட்டனர். யார் இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் பெரியார் சிலைகளை அவமானப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் கோவையில் சுந்தராபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது சில கயவர்கள் காவிச் சாயத்தை ஊற்றியுள்ளனர். இது பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியாருக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அவமரியாதையை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக கண்டித்துள்ளார். பெரியாருக்கு ஏதாவது ஒன்று என்றால் அதிமுக தரப்பிலிருந்து முதலில் வரும் கோபக் குரல் ஜெயக்குமாருடையதுதான். அந்த வகையில் கோவை சம்பவத்தையும் அவர் காட்டமாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில் . பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனத்தனமான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தத் தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் காட்டமாக நான்கு டிவீட்டுகளைப் போட்டுள்ளார். ஒரு டிவீட்டில், " கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டாக்டர் கூறியுள்ளார்.
அடுத்த டிவீட்டில், "தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கோபம் காட்டியுள்ளார்.

3வது டிவீட்டில், "கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று ஆவேசம் காட்டியுள்ளார்.
கடைசியாக நான்காவது டிவீட்டில், "கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் என்று உச்சம் காட்டியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் யாரை சுட்டிக் காட்டி கோபம் காட்டியுள்ளார் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை.. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படியே அவர் போட்டுள்ளார் என்பது முக்கியமானது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications