பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்.. எந்த மாவட்டம் கடைசி தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது.
+2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடைபெற்றது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் +1 பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 10 மற்றும் 12ஆவம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியான நிலையில், இன்று +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

தேர்ச்சி விகிதம்
மொத்தம் 8.3 லட்சம் மாணவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்து இருந்த நிலையில், அவர்களில் 41,376 பேர் தேர்வு எழுதவில்லை என்று தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு +1 தேர்ச்சி விகிதம் 90.07%ஆக உள்ளது. வழக்கம் போல மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99% ஆகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 84.6% ஆகவும் உள்ளது.

முதல் இடம் கடைசி இடம்
மாவட்ட வாரியாக பார்க்கும் போது பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. பெரம்பலூரில் தேர்ச்சி விகிதம் 95.56%ஆக உள்ளது. அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் 95.44 சதவிகித தேர்ச்சி உடன் 2ஆம் இடத்திலும், மதுரை மாவட்டம் 95.25 சதவிகித தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 80.02% தேர்ச்சி உடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகள்
அதேபோல மாநிலத்தில் இருக்கும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 100%ஆக உள்ளது. இன்று காலை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in போன்ற தளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications