நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. 50 வாக்குறுதிகள் உடன் பாமக தேரத்ல் அறிக்கை வெளியீடு!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாமக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 40 வாக்குறுதிகளைக் கொண்டு தனியாகத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் வரும் சனிக்கிழமை (பிப். 19) தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இருந்தே அதே கூட்டணி திமுகவில் தொடர்கிறது.
அதேநேரம் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக இந்த முறை தனித்துக் களமிறங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தனியாகத் தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது. நம் தெரு, நம் நகரம், நம் எதிர்காலம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் தெருக்கள், குப்பை எரிப்பு, வீட்டுவசதி, மின்சார வாகனங்கள் உட்பட 50 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னைக்கு தனியாகவும், மற்ற பகுதிகளுக்குத் தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாமக வெளியிட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையைப் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில், "நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகத்தை விட உள்ளாட்சி ஜனநாயகம் வலிமையானது. இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், உள்ளாட்சியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பது பாமக நிலைப்பாடு. நகர்ப்புற உள்ளாட்சியில் மாற்றம் படைப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications