குட்டி நாயை தாக்கிய நபர்.. வெளியான சிசிடிவி காட்சி.. துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீஸ்!
சென்னை மணலியில் நாயை தரையில் அடித்து துன்புறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை மணலியில் நாயை தரையில் அடித்து துன்புறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மணலியில் ஆசையாக காலை சுற்றி வந்த குட்டி நாயை நபர் ஒருவர் கையில் தூக்கி தரையில் வீசிய சம்பவம் வீடியோவாக வெளியானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த சிசிடிவி கேமராவின் பதிவை வைத்து சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் ப்ளூ கிராஸ் அமைப்பிடம் புகார் அளித்தார். இதனையடுத்து ப்ளூ கிராசின் வழக்கறிஞர் கஸ்தூரி மணலி காவல் நிலையத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

இதனையடுத்து நாயை துன்புறுத்திய நிகழ்வு சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரணையில் ஈடுபட்ட மணலி போலீசார் சேலைவாயில் பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் பாலமுருகன் என்பவர்தான் அந்த நாயை தாக்கியது என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரித்ததில் பாலமுருகன் தன் கடைக்கு அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கு இருந்த குட்டி நாயை அழைத்து ஆசையாக தூக்கிய போது இதனை கண்ட அதன் தாய் நாய் கடிப்பதற்காக ஓடிவந்ததால் பயந்து இப்படி செய்ததாக கூறியுள்ளார். நாய் மீது ஏற்பட்ட பயத்தால் கையில் இருந்த குட்டியை அதன் மீது தூக்கி அடித்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தன்னை பாதுகாத்து கொள்ள நாயை தூக்கி அடித்ததை ஒப்பு கொண்டதை அடுத்து மணலி போலீசார் பாலமுருகனை நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர் . சாலையில் சக மனிதரை ஒருவர் தாக்கும் போது அதனை வேடிக்கை பார்த்துவிட்டு செல்லும் மனிதர்கள் மத்தியில் , குட்டி நாயை தூக்கி வீசியதை கண்டவுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து நாய்களும் பாலமுருகனை சுற்றிவளைத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது காண்போரை நெகிழ வைத்துள்ளது.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications