குழந்தைகளுக்கு மறக்காம இன்று சொட்டு மருந்து குடுங்க..எதிர்கால தலைமுறையை போலியோ இல்லாமல் காக்கலாம்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள்,சத்துணவு மையங்களில் போலியோ சொட்டு மருந்துகளை போட்டுக் கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக ஆண்டுதோறும் ஆறாவது வாரத்திலும் ,14 வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்படுகிறது.
போலியோ அல்லது இளம்பிள்ளை வாதம் எனப்படும் நோயானது கழிவு நீர், அசுத்தமான நீர் வழியாக பரவுகிறது. மனிதர்களுக்கு இந்நோய் சுகாதார முறையில் இல்லாத தண்ணீரை அருந்தும் போது பரவுகிறது. கழிவு நீர், மலம் வழியாகவும் இந்நோய் பரவும்.

இந்த வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 90 சதவீத பேருக்கு எந்த வித அறிகுறியும் தோன்றுவதில்லை என்றே சொல்லலாம். ஆனால் தீவிரமாக பரவி விட்டால் முடக்கு வாதம் ஏற்படுகிறது. குறிப்பாக நரம்பு மண்டலத்துக்குள் பரவினால் இந்த வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கி பக்கவாதத்தை ஏற்படுத்துக்கிறது. இதனால் இந்த நோய் மிகவும் தீவிரம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
போலியோ நோயை தடுக்க வாய்வழியாக செலுத்தப்படும் திரவ சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. போலியோவை ஒழிக்க பல ஆண்டுகளாக உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கிறது. இதில் ஏறத்தாழ வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக ஜெருசலேம், நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்களில் போலியோ பரவுவதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நாசாவ் கவுண்டி பகுதியில் உள்ள கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் பதறிப்போன அங்குள்ள சுகாதார அதிகாரிகள் போலியோ தடுப்பு மருந்து செலுத்துவதை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்த மாகாணத்தில் மட்டும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படாமல் இருக்க தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் லட்சக்கணக்கான குழந்தைகள் பயன் அடைந்து வருகின்றனர். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் சிறப்பு சொட்டு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை செலுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே சுகாதாரத் துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள் ,சத்துணவு மையங்களில் போலியோ சொட்டு மருந்துகளை போட்டுக் கொள்ளலாம். அத்துடன் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையங்கள் ,வணிக வளாகங்கள், விமான நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக ஆண்டுதோறும் ஆறாவது வாரத்திலும் ,14 வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்படுகிறது. எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தி பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications