Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகெங்கும் மக்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் இதனால் மக்கள் ஒரேயடியாக அதிகப்படியான பெட்ரோல்- டீசலை வாங்கி குவிக்கும் சூழலில் இதனால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த செயற்கை தட்டுப்பாடு காரணமாகச் சென்னை உட்பட மாநிலத்தில் சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதல் காரணமாகச் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும் சூழலில், பெட்ரோல்- டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tamil Nadu Petrol Bunk Closures Spark Panic Buying Commuters Stockpile Fuel Amid Shortage Fears

மக்கள் காத்திருப்பு

இதற்கிடையே சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகள் புதன்கிழமை இரவு முழுவதும் பரவின. இதனால் நேற்றைய தினம் நகரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பீதியடைந்த வாகன ஓட்டிகள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருள் நிரப்பினர். புதன்கிழமை காலை முதலே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் பெட்ரோல் நிலையங்களில் காத்திருந்தனர்.

இது தொடர்பாகச் சென்னை மக்கள் கூறுகையில், "கிட்டத்தட்ட எல்லா பெட்ரோல் பங்குகளிலும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. வழக்கமாக பெட்ரோல் பிடிக்க இரண்டு நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால், இப்போது 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது என் நேரத்தை வீணாக்குகிறது. இதனால் நான் ஆபீசுக்கும் தாமதமாகவே செல்ல வேண்டி இருக்கிறது" என்றார்.

இரண்டு மடங்கு அதிகரித்த விற்பனை

தற்போது வரை தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால், அச்சம் காரணமாக மக்கள் பெட்ரோல், டீசல் நிரப்ப மக்கள் குவிகிறார்கள். இதனால் வேளச்சேரியில் பெட்ரோல்- டீசல் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்தாக பாரத் பெட்ரோலியம் நிலைய மேலாளர் ஒருவர் தெரிவித்தார். வழக்கமாகத் தினசரி 13,000 முதல் 16,000 லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், இப்போது அது 26,000 லிட்டராக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். டீசல் விற்பனையும் 7,000 லிட்டரில் இருந்து 13,000 லிட்டராக கணிசமாக அதிகரித்துள்ளது.

மூடல்

இந்த அதிகப்படியான டிமாண்ட் காரணமாகச் சென்னையில் சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு காரணமாக இது மூடப்படவில்லை. மாறாகச் செயற்கையாக மக்களிடையே எழுந்த பீதி தான் இதற்குக் காரணம். அதாவது எங்கு வரும் நாட்களில் பெட்ரோல்- டீசல் கிடைக்காதோ என நினைத்து மக்கள் அதிகப்படியான எரிபொருளை வாங்குகிறார்கள். இதுவே பற்றாக்குறைக்குக் காரணம் என்கிறார்கள்.

நேற்று பிற்பகலில் கூட வேளச்சேரியில் இதுபோலத் தான் ஒரு பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. அதற்கும் இந்த அச்சமே காரணம். அதாவது அங்கு எப்போதும் மக்கள் மாலை நேரத்தில் தான் பெட்ரோல்- டீசலை அதிகம் போடுவார்களாம். இதனால் இரவில் எரிபொருளை நிரப்புவார்கள். ஆனால், நேற்றைய தினம் காலை முதலே அதிகப்படியான மக்கள் பெட்ரோல்- டீசலை நிரப்பியதால் பிற்பகலிலேயே கையிருப்பு காலியாகிவிட்டது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

விதிமீறல்கள்

இந்த அச்சம் காரணமாக பலரும் இதுபோல முண்டியடிக்கும் சூழலில், சென்னையைத் தாண்டியும் பல இடங்களில் இதுபோல செயற்கை தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், கோவை, மதுரை நகரங்களிலும் மக்கள் 45 நிமிடங்களுக்கும் மேலாக வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக் காத்திருந்தனர். மேலும், விதிகளை மீறி சிலர் கண்டெய்னர்களிலும் பெட்ரோல் டீசலை நிரப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+