இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு சர்ப்ரைஸ்..எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த முதல்வர்.. “உங்களில் ஒருவன்”
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாற்பத்தி ஐந்தாவது புத்தக கண்காட்சியில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 16ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான "பபாசி" சார்பில் நடைபெற்ற இந்த புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர், தான் சுயசரிதை எழுதியது குறித்தும் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்களில் ஒருவன் எனும் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன் எனவும் சுயசரிதையான அந்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக முக்கிய நிகழ்வுகள் தொடங்கிய போராட்டம் வரை புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்" எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். விரைவில் 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேசிய தலைவர்களுக்கு அழைப்பு
இந்த நிலையில் தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதும் "உங்களில் ஒருவன்" நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பார் என்கிற புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அத்துடன், சமூக நீதிக்கூட்டமைப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தேசிய அளவிலான தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலத்த எதிர்பார்ப்பு
அதன் படி, "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார் என்கிற செய்தியும் வெளியாகி உள்ளன. இவை தவிர, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், தேசிய அளவில் அடுத்து செய்ய வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பல விஷயங்கள் பற்றி இந்த விழாவின் போது ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வேண்டுமென பூச்சி முருகன் அவருக்கு நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்க்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிய நிறுவனர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications