5 லட்சம் கொடுத்தால் 500 கோடிப்பே.. சென்னையில் “சதுரங்க வேட்டை”..பணத்தை இழந்த தாமரை பூவுக்கும் நடிகர்
சென்னை : 5 லட்சம் கொடுத்தால் 500 கோடி கிடைக்கும் என்று கூறி சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் மோசடி கும்பல் தன்னிடம் சுமார் ஒன்றே முக்கால் கோடி பணத்தை பெற்று விட்டு ஏமாற்றிவிட்டதாக பிரபல நடிகர் விக்னேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
1985 முதல் 1995 வரையிலான காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ்.
கிழக்குச் சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர். பல முன்னணி இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் இணைந்து அப்போது பிசியாக நடித்தவர்.

நடிகர் விக்னேஷ்
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை பாடல் அப்போது மிகப்பிரபலம் அதன்பிறகு படவாய்ப்புகள் குறைந்ததால் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். சென்னையில் கடை ஒன்றை நடத்தி வரும் அவர் தற்போது தான் இரிடியம் மோசடி கும்பல் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இரிடியம் மோசடி
அதில், " நான் நடத்திவரும் கடையில் ராம் என்பவர் வாடிக்கையாளராக அறிமுகமாகி பழகினார். தொடர்ந்து நண்பர் போல் பேசி பழகி அவர் தனக்கு இரிடியம் விற்பனை குறித்து நன்கு தெரியும் எனவும் தற்போது கையில் பணம் இல்லாததால் அதனை தொடர முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். மேலும் பல கோடீஸ்வரர்களும், தற்போது டாப் நடிகர்கள் பரும் தனது வாடிக்கையாளர்கள் எனக் கூறி நம்ப வைத்துள்ளார்.

1.82 கோடி மோசடி
இரிடியம் விற்பனை குறித்து ஏராளமான தகவல்களை கூறிய ராம் அது தொடர்பாக பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று ரகசிய கூட்டங்களை நடத்தியதாகவும், இந்த தொழிலுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டபூர்வ அனுமதி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் 5 லட்சம் கொடுத்தால் 500 கோடியாக லாபம் கிடைக்கும் எனக் கூறி நம்ப வைத்த ராம் நடிகர் விக்னேஷ் இடம் சுமார் 1.82 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் வழங்காமலும் ஏமாற்றியுள்ளார்.

போலீசில் புகார்
பலமுறை தொடர்பு கொண்டும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்ய வைத்திருந்த நிலையில் விக்னேஷ் போலவே பலரையும் ராம் ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும் தற்போது அவர் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து இருப்பதாகவும் தான் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு அவர் கூறியுள்ளார். சதுரங்க வேட்டை சினிமா படம் போல் சினிமாத் துறையைச் சேர்ந்த வருடமே மோசடி கும்பல் கைவரிசை காட்டி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications