அஞ்சலகங்களில் இனி தமிழில் படிவங்கள்.. அஞ்சல் துறை உறுதி.. சாதித்த சு.வெங்கடேசன் எம்.பி!
சென்னை: தமிழகத்தில் அஞ்சலகங்களில் இனி தமிழில் படிவங்கள் வழங்கப்படும் என்று அஞ்சல் துறை உறுதி அளித்துள்ளது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கையை அஞ்சல் துறை ஏற்றுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடிக்கப்படுவதை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
அலுவலக மொழிகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டம் 347 பிரிவின் படி ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் மொழியையே தேர்வு செய்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் தான் அச்சடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார்.

எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
அலுவலக மொழிகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டம் 347 பிரிவின் படி ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் மொழியையே தேர்வு செய்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் தான் அச்சடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார்.

திணிப்பது நியாயமா?
அலைபேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல்துறை மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று சு.வெங்கடேசன் எம்.பி. தனது கடிதத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் எம்.பி.யின் கோரிக்கையை
ஏற்றுள்ள அஞ்சல் துறை தமிழகத்தில் அஞ்சலகங்களில் இனி தமிழில் படிவங்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

இணைய வழியில் கிடைக்கின்றன
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அஞ்சல் அலுவலக பண விடைகள், சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன; அலை பேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல் துறை மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கு 22.09.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

நமது பயணம் தொடரும்.
இன்று நேரில் சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்த போது அவர் இக்கோரிக்கையை ஏற்று இரு மொழிகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் படிவம் கிடைப்பதற்கான செய்தியை தெரிவித்து அதற்கான ஆணையையும் வழங்கினார். இதற்கான அறிவுறுத்தல், ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகத்தால் எனது கடிதத்தை குறிப்பிட்டு, அமைச்சகத்தின் பதிலில் தரப்பட்டுள்ளது. தமிழன்னை மகிழ்வாள். மொழி உரிமைக்கான நமது பயணம் தொடரும்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி?












Click it and Unblock the Notifications