விடாத மின்வாரியம்.. சென்னையில் இன்றும் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா?
சென்னை: மின்வாரியம் சார்பில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாதம் ஒருமுறை மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும் தேதி என்பது ஒவ்வொரு ஏரியாவை பொறுத்து மாறுபடும்.

சென்னை மிகப்பெரிய நகராக உள்ளது. இதனால் தினமும் சென்னையின் ஒவ்வொரு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும்போது குறிப்பிட்ட இடங்களில் தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பது அமல்படுத்தப்படும்.
அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெறும் நிலையில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 24.08.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடப்பேரி: எஸ்வி கோவில் தெரு, விவி கோவில் தெரு, ரயில்வே பார்டனர் ரோடு, அமர் ஜீவா தெர, சுந்தரம் காலனி 1 முதல் 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1 முதல் 3 குறுக்கு தெருக்கள், வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, மாதவன் தெரு, குப்புசாமி தெரு, சுந்தராம்பாள் நகர், ஷர்மிளா தெரு, வாட்டார் போர்டு, குமரன் தெரு, ஜீவா தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சேலையூர் - செம்பாக்கம்: சேலையூரை பொறுத்தவரை இந்திரா நகர், பகவதி நகர், சீனிவாச நகர், அகரம் மெயின் ரோடு, ஜேஜே ராம் காலனி, அம்பேத்கர் தெரு, லட்சுமி நகர், ஐஏஎப் சாலை,, நடராஜன் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. அதேபோல் செம்பாக்கம் ஏரியாவை எடுத்து கொண்டால் டெல்லஸ் அவென்யூ - கட்டம் 1 அண்ட் 2, அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு, நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.












Click it and Unblock the Notifications