விபச்சாரத்துக்கு வந்த அழகி.. 3 மணி நேரம் உல்லாசம்.. கையில் தங்க நகைகள்.. சென்னை போலீசுக்கு ஓடிய நபர்
சென்னை: ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து வரப்பட்ட இளம் அழகி செய்த காரியத்தால் பதறிப்போய்விட்டார் ஐ.டி ஊழியர் ஒருவர். இது தொடர்பான புகாரையும் போலீசில் தந்துள்ளார். என்ன நடந்தது சென்னையில்?
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருககு 30 வயதாகிறது.. என்ஜினியரிங் படித்துவிட்டு, பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

உல்லாசம்: இவர் "லோகேன்ேடா" என்ற டேட்டிங் செயலி மூலம், இளம்பெண்களை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பது வழக்கமாம். தன்னுடைய வீட்டில் யாருமில்லாதபோது இப்படி பெண்களை அழைத்து வருவாராம் குமார்.
அப்படித்தான், 25 வயது இளம்பெண் ஒருவர் குமாருக்கு இந்த ஆப்பில் பழக்கமாகியிருக்கிறார்.. 3 மணி நேரம் உல்லாசமாக இருப்பதற்கு ரூ.6 ஆயிரம் என்று அந்த பெண்ணிடம் பேரமும் பேசியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தந்துள்ளார்.
3 மணி நேரம் பேரம்: நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் , அந்த இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார் குமார்.. இருவரும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. பிறகு அந்த பெண்ணுக்கு பேசியபடி, ரூ.6 ஆயிரம் பணம் தந்து அனுப்பிவைத்தார்.. அதற்கு பிறகு குமார் குளிப்பதற்காக பாத்ரூம் சென்றுள்ளார்.
குளித்து முடித்துவிட்டு வந்து பார்த்தால், பெட்ரூமில் உள்ள பீரோ சரியாக மூடாமல் இருப்பதை பார்த்தார்.. இதனால் சந்தேகமடைந்த குமார், பீரோவை திறந்து பார்த்தால், துணிகள் கலைந்திருந்தன. அத்துடன், பீரோவில் இருந்த 34 கிராம் மதிப்புள்ள தங்க காசுகளும் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குமாருக்கு, உல்லாசத்திற்கு அழைத்து வந்த பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனால், லோகேன்டோ ஆப் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார்.
எங்கே அந்த பெண்: ஆனால் அந்த பெண்ணோ, தன்னுடைய அக்கவுண்ட்டை மொத்தமாக டெலிட் செய்துவிட்டு, அந்த செயலியில் இருந்து வெளியேறிவிட்டார்.. இதனால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ளவும் முடியாமல், இதை பற்றி வெளியிலும் சொல்ல முடியாமல், குமார் குழம்பினார். எனவே, வேறுவழியின்றி அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, விபச்சார பெண் மீது புகார் தந்தார்.
இந்த புகாரின்பேரில், போலீசாரும் குமார் வீட்டு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணை அடையாளம் கண்டுள்ளனர்.. ஆனால் அந்த பெண் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.. தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள். உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு 5 பவுன் நகையை ஐடி நிறுவன ஊழியர் இழந்து நின்றுகொண்டிருக்கிறார்.
ஆன்லைனில் உல்லாசத்திற்கு அந்த பெண்ணை அழைத்தபோது, அவரது குரலில் மயங்கவிட்டாராம் சம்பந்தப்பட்ட இளைஞர்.. அதற்கு பிறகே அவரை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு கடந்த 22-ந்தேதி வீட்டுக்கு அழைத்துள்ளார். உல்லாசத்தில் திளைத்த அந்த இளைஞர், அழகிக்கு தன்னுடைய வீட்டையும் சுற்றி காட்டினாராம்.. அதற்கு பிறகுதான் பீரோவில் வைத்திருந்த இரண்டலை லட்சம் மதிப்பிலான 5 தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தன. சம்பந்தப்பட்ட இளைஞரை போல, எத்தனை பேர் இதுவரை இவரிடம் பணத்தை இழந்துள்ளார்கள்? என்று தெரியவில்லை.. அந்த பெண் கைதானால்தான் விவரம் தெரியவரும் என்கிறார்கள்.
ஆனால், விபச்சாரத்தில் ஈடுபடும் சில பெண்கள், வழிப்பறி சம்பவங்களிலும் அடிக்கடி ஈடுபட்டு விடுகிறார்களாம்.. குறிப்பாக, பஸ் ஸ்டாண்டுகளை மையப்படுத்தியே இந்த திருட்டுகள் நடப்பதாக சொல்கிறார்கள்.. இரவு நேரங்களில் ஆள் அரவமற்ற இடமாக இருக்கும் பஸ் ஸ்டாண்டு பின்புறம், இப்படியான சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், இது தொடர்பான புகார்களும் போலீசுகுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வருவதால், அந்த நடவடிக்கையும் கையில் எடுத்துள்ளனர.
இப்படித்தான் கடந்த மாதம் சென்னை துரைப்பாக்கத்தில் விபச்சார பெண் தீபாவை, வீட்டுக்கு அழைத்து வந்தபோது நடந்த தகராறில் கொடூர கொலையே நடந்துவிட்டது. அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருப்பதற்கு 6000 ரூபாய் பேசியிருக்கிறார் மணிகண்டன் என்ற இளைஞர்.. ஆனால், அந்த பெண்ணோ திடீரென 12,000 ரூபாய் கேட்டு மிரட்டவிம், இருவருக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது.
இந்த கோபத்தில் சுத்தியலால் தீபாவின் தலையில் அடித்ததுமே அவர் உயிரிழந்து விட்டார். பிறகுதான் சூட்கேஸ் வாங்கி, அதில் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி போட்டுள்ளார்.. அந்த பெண்ணின் மூளையையும் தனியாக வெட்டியெடுத்து, எண்ணெய் ஊற்றி வறுத்து சாப்பிட்டு, தமிழகத்துக்கே பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications