எடப்பாடிக்கு கட்சி கவலை! ஆர்பி உதயகுமாருக்கு பதவி கவலை! ராஜேந்திர பாலாஜிக்கு என்ன கவலை தெரியுமா?
சென்னை : எதிர்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சென்னையில் கைதாகி அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தீபாவளி கொண்டாட முடியாமல் அதிமுகவினரை அச்சுறுத்தும் விதமாக திட்டமிட்டு எடப்பாடியார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என சட்டசபை தலைவரிடம் கடிதம் கொடுத்தும் அலட்சியப்படுத்துவதாக சட்டசபையை புறக்கணித்தனர்.
மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இதற்கு காவல்துறையினர் சார்பில் அனுமதி அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக-வினரை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்

3 வது அத்தியாயம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சியை நசுக்கி விடலாம் என்ற ஆளும் கட்சியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எடப்பாடியார் தான் அதிமுகவின் 3 வது அத்தியாயம். அதிமுகவின் வளர்ச்சியை முதல்வரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

தீபாவளி
தீபாவளி கொண்டாட முடியாமல் அதிமுகவினரை அச்சுறுத்தும் விதமாக திட்டமிட்டு எடப்பாடியார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடியார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் தமிழகம் முழுவதும் இதேபோல் போராட்டம் வெடிக்கும் எனப் பேசினார்.
-
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications