ஸ்டெர்லைட்.. போலீசாரிடமும், ரஜினிகாந்த்திடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது- அருணா ஜெகதீசன் பேட்டி
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில், ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த உள்ளதாக விசாரணை ஆணைய தலைவரும், முன்னாள் நீதிபதியுமான அருணா ஜெகதீசன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பொது மக்கள் பலியாகினர். 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 14ம் தேதி தனது இடைக்கால அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் அருணா ஜெகதீசன் வழங்கினார்.

மூன்று உத்தரவுகள்
இந்த பரிந்துரையை ஏற்று, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ், பாதிக்கப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம், கல்வி, வேலைவாய்ப்புக்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என்ற 3 முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பிறப்பித்தார்.

லாக்டவுனால் தாமதம்
இந்த உத்தரவுகளை வரவேற்று பேட்டியளித்த அருணா ஜெகதீசன் மேலும் கூறியதாவது- எப்போது விசாரணை முடியும் என்ற கேள்வி என்னிடம் முன் வைக்கப்படுகிறது. இந்த மாதமே, விசாரணைக்கு சிட்டிங் ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் லாக்டவுனால் அது தள்ளிப்போயுள்ளது.

காவல்துறையிடம் விசாரணை
காவல்துறையினரிடம் நடத்த வேண்டிய விசாரணைதான் மிச்சமுள்ளது. பொது மக்களிடம் நடத்த வேண்டிய விசாரணை நிறைவடைந்து விட்டது. எனவேதான் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தேன். விரைவில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.

உயர் அதிகாரிகள்
அதேநேரம், காவல்துறையில் 250 பேரிடம் விசாரணை நடத்த தேவையுள்ளது. இதில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் உள்ளனர். முடிந்த அளவுக்கு வேகமாக விசாரணையை முடிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்தப்படும்
ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாக கூறிய ரஜினிகாந்த்திடம் அது தொடர்பாக விளக்கம் கேட்க வேண்டியுள்ளது. பெருந்தொற்று காலம் என்பதால், இப்போது ரஜினிகாந்த்திடம் விசாரிக்க முடியவில்லை. நிலைமை சரியானதும் ரஜினிகாந்த்திடம் விசாரிக்கப்படும். இவ்வாறு அருணா ஜெகதீசன் தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications