சென்னையில் இனி பறக்கலாம்.. மெரினாவுக்கு வரும் ரோப் கார் சேவை.. விரைவில் முடிவு!
சென்னை: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம், நகரில் ரோப் கார் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம்மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ராட்சத ராட்டினங்களை உள்ளடக்கிய பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் ரோப் கார் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐடியா கேட்ட அமைச்சர்
அண்மையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் நகரை அழகுபடுத்த புதுவித யோசனைகளை முன்வைக்குமாறு பெருமாநகராட்சி கவுன்சரிலர்களிடம் கேட்டுக் கொண்டார். அதில் ஏராளமான புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஒரு சிலர் ரோப் கார் சேவையை தொடங்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர்.

மெரினாவில் ரோப் கார் சேவை
இதனைத்தொடர்ந்து சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வரும் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை தொடங்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரோப் கார் சேவை பற்றி சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

முதல் சேவை எங்கு?
இதனால் சென்னையில் ரோப் கார் சேவை முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்ட் வரை தொடங்கப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளது. சுமார் 3 கி.மீ தூரம் வரை ரோப் கார் சேவையை முதலில் தொடங்கவும், பின்னர் ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து, நேப்பியர் பாலம் வரை ரோப் கார் சேவையை தொடங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இறுதி முடிவு
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் புதிய திட்டங்கள் விரைவில் நிர்வாக் அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து, ரோப் கார் சேவை குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications