Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் போலீசில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும், அதன் பரபரப்பான பின்னணி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

Rs 4 crore case Chennai Tambaram police sent summon to Nellai BJP candidate Nainar Nagendran and his aide

முன்னதாக கடந்த 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பபட்ட ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது ரூ.4 கோடி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதோடு நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் தான் பணத்தை தந்து நெல்லைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும் தெரிவித்துள்னர்.

Rs 4 crore case Chennai Tambaram police sent summon to Nellai BJP candidate Nainar Nagendran and his aide

இதையடுத்து போலீசார் முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முருகன் போலீசாரிடம், ‛‛நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் என்னை தொடர்பு கொண்டு பேசி பணத்தை அனுப்பி வைக்கப்படுவதை மட்டுமே கூறினார்’’ என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதா? திமுக புகாருக்கு நெல்லை கலெக்டர் விளக்கம்


இது நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையி்ல தான் தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் மே மாதம் 2ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்மனை நேரில் வழங்க தாம்பரம் காவலர் ஒருவர் திருநெல்வேலி புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த வழக்கில் கடந்த 22ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை. மாறாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று தான் தற்போது நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு மே 2ம் தேதி ஆஜராகக்கோரி தாம்பரம் போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+