உளவுத்துறையில் கூடுதல் பதவி...அரசியலை கவனிக்க எஸ்.பி நியமனம்...தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை கூடுதல் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முந்தைய ஆட்சியில் இருக்கும் உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். முதலில் மாற்றப்படுவது தலைமை செயலாளர்தான்.

உளவுத்துறையின் பங்கு
இதனை தொடர்ந்து உளவுத்துறை மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். ஒரு ஆட்சியில் உளவுத்துறையின் பங்கு என்பது மிகப்பெரியதாகும். இதனால் ஆட்சியாளர்கள் தங்களது வசதிக்கேற்ப உளவுத்துறையில் டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி, ஐஜி, எஸ்.எஸ்.பி ஆகிய பதவிகளில் நம்பிக்கையானவர்களை நியமிப்பார்கள். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தமிழக டி.ஜி.பி மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறையின் ஒட்டு மொத்த அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

எஸ்.எஸ்.பி.க்கு பவர்
தற்போது உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள், எஸ்.எஸ்.பி.யாக அரவிந்தன் ஆகியோர் உள்ளனர். ஐ.ஜி பதவி காலியாகவே உள்ளது. உளவுத்துறையில் உயர் அதிகாரிகள் பலர் இருந்தாலும் எஸ்எஸ்பி என்றழைக்கப்படும் எஸ்.பி பதவிக்குதான் பவர் அதிகமாக இருக்கும், ஏனென்றால் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள அத்தனை நிகழ்வுகளும், தகவல்களும் கீழ்மட்ட அதிகாரிகள் மூலம் இவரிடம்தான் போய்ச்சேரும். இவர்தான் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு அண்ட் தகவல்களை அளிப்பார். இத்தகைய அதிகாரமிக்க இந்த பதவியில் இப்போது அரவிந்தன் உள்ளார்.

இதுவே முதல் முறை
இந்த நிலையில் தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி.யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்.எஸ்.பி பணியிடத்தை அரசு உருவாக்கி இருப்பது தமிழக போலீஸ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் சரவணன் என்பவர் நியமிப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

புதிய பணியிடம்
சரவணன் தற்போது ஒருங்கிணைந்த குற்றங்கள் தொடர்பான உளவுப் பிரிவு எஸ்.பி.யாக உள்ளார். முந்தைய தி.மு.க ஆட்சி காலத்தில் உளவுத்துறை டி.எஸ்.பி.யாக சரவணனும், விருப்ப ஓய்வில் சென்றுவிட்ட ஜெயசங்கரும் தமிழக அரசியல் கள நிலவரத்தை விரல்நுணியில் வைத்திருந்தவர்கள். ஆட்சி மாற்றம் காரணமாக இருவரும் துாக்கி அடிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சரவணன் தான் உளவுத்துறை எஸ்.பி.யாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 மாத தாமதங்களுக்கு பிறகு புதிய பணியிடம் உருவாக்கி அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல பெயர் எடுத்தவர்
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள சரவணன், தான் பணியாற்றிய மாவட்டங்களில் அதிகாரிகளுடமும், மக்களிடமும் நல்ல பெயர் எடுத்தவர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் நண்பனாகவே மதிக்கப்பட்டவர். இனிமேல் அரசியல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் சரவணன் கவனிப்பார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான்












Click it and Unblock the Notifications