உரிய நேரம்.. உரிய காலம்.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா.. முன்னாள் எம்எல்ஏ பரபர!
சென்னை: உரிய நேரத்தில் உரிய காலத்தில் சசிகலா அதிமுக தலைமை அலுவலகம் வருவார் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் கூறியுள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பில் இருக்கும் சூழலில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் படிகளை நாடியுள்ளார்.

இதனிடையே அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா பேசி வருகிறார். ஆனால் டிடிவி தினகரனோ, ஓபிஎஸ்-ற்கு ஆறுதலாகவும், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று குறிப்பிடுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலத்தில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் இணைந்து செயல்படும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வந்த சசிகலா, நேற்று தனது ஆதரவாளர்களை இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார். முன்னாள் அதிமுக எம்எல்ஏ நரசிம்மன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சசிகலாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நரசிம்மன் கூறுகையில், அதிமுகவில் சுய லாபத்திற்காக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். சில காலம் மட்டுமே இது நீடிக்கும். நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் முடிந்த பின்னர் உரிய நேரத்தில் உரிய காலத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவார் என்று தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15ம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில், மறுபக்கம் சசிகலா முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பிலும், கோவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி மூன்று பேரும், மூன்று பக்கம் தொண்டர்களை சந்தித்து வருவதால், விரைவில் மூவரும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications