சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. பேஸ்புக்கில் சர்ச்சைப் பதிவு போட்ட போலீஸ்காரர்.. அதிரடி சஸ்பென்ட்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தை ஆதரிக்கும் விதமாக பேஸ்புக்கில் பதிவிட்ட சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.
லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது .

என்ன சொன்னார்
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை ஆதரிக்கும் விதமாக போலீசார் ஒருவர் செய்த போஸ்ட் சர்ச்சையாகி உள்ளது. சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து சாத்தன் குளம் சம்பவம் தொடர்பாக பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் டேய் தம்பிகளா வாங்க அடுத்த லாக்அப் டெத்துக்கு ஆள் கிடைச்சுடுச்சு.

பேஸ்புக் போஸ்ட்
லாக்அப் டெத்துக்கு ஆள் கிடைக்கலைன்னு பார்த்தோம். இப்போது ஆள் கிடைச்சுடுச்சு, என்று குறிப்பிட்டு அதோடு இன்னும் சர்ச்சையாக சில விஷயங்களை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் பெரிய அளவில் வைரலானது. இந்த போஸ்டை பலரும் ஷேர் செய்து அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர்.

நீக்கினார்
இந்த நிலையில் தனது பேஸ்புக் போஸ்டை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து நீக்கி இருந்தார். அதோடு இந்த பதிவு மக்கள் மனதை புண்படுத்தியது என்ற மனவருத்தத்துடன் பதிவிடுகிறேன். மேற்கண்ட இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய பேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். இதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

நீக்கப்பட்டார்
என்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று சதீஷ் முத்து விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications