மாட்டிறைச்சியால் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி! எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!
சென்னை: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி மூதாட்டி ஒருவர் அரசுப் பேருந்திலிருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட நிகழ்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, அரசுப் பேருந்தில் பயணம் செய்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியை, அப்பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் மாட்டிறைச்சியை எடுத்துச்சென்றதாக கூறி, நடுவழியில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பின்றி இறக்கி விட்டதாகவும், இதனால் அந்த மூதாட்டி அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்தே சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.''
''மாட்டிறைச்சியை பேருந்து பயணத்தின் போது எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றுகூறியே அந்த மூதாட்டியை நடத்துநர் நடு வழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.''
''பாஜக ஆளும் வட மாநிலங்களில் தான் மாட்டிறைச்சியின் பெயரால் அவலங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பகுத்தறிவு நிறைந்த மாநிலமான தமிழகத்தில் மாட்டிறைச்சியை காரணம் காட்டி மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. இதுபோன்றதொரு அவலம் இனி நிகழ்ந்திடாத வகையில், மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ''
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் முஸ்லீம் மாணவி ஒருவரிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதால் உனக்கு திமிர் அதிகமாக இருக்கும் என்று கூறி ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வேலூர் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் இதற்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பொதுவாக வட மாநிலங்களில் தான் மாட்டிறைச்சியை வைத்து சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமாகவே நிகழும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications