அப்பாவி முஸ்லிம்கள் பலிகடா ஆவார்கள்.. தமிழ்நாடு போலீசில் தீவிரவாத தடுப்பு பிரிவு -எஸ்டிபிஐ எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அனுமதி அளித்திருப்பது மீண்டும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை பலிகடாவாக்கும் நடவடிக்கையாக மட்டுமே அமையும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்து உள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக காவல்துறையில் இருக்கின்ற கட்டமைப்புகளைக் கொண்டே தீவிரவாத நடவடிக்கைகளை, அதுதொடர்பான சதிச் செயல்களை தடுக்க முடியும் என்கிறபோது, புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பது என்பது தேவையற்ற ஒன்றாகும். புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கு பதிலாக காவல்துறையில் இருக்கும் கட்டமைப்புகளை நவீன முறையில் பலப்படுத்துவதன் மூலம் தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக வைத்துக்கொள்ள முடியும்.
ஏற்கனவே இருக்கும் பல விசாரணை அமைப்புகளால் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாகவும் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வந்துள்ளனர். அந்த வகையில் புதிதாக அமைக்கப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவும் அதுபோன்றே செயல்படுமானால் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமே மீண்டும் பலிகடா ஆக்கப்படும் சூழல் உருவாகும்.
மட்டுமின்றி முதல் கட்டமாக இந்த தடுப்பு பிரிவு தொடங்கப்படும் மாவட்டங்களைக் கொண்டே புதிய பிரிவின் செயல்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற அனுமானம் இப்போதே தெரிய வருகின்றது. ஆகவே, தமிழக அரசு, காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்து காவல் துறையின் கட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் பாசிச சக்திகளின் சதிச் செயல்களை தடுக்கும் பிரிவை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications