Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்‌ஷன்.. கவனித்த பாஜக

செங்கோட்டையன், பொன்னையன் பதில்களால் பாஜக தரப்பு கடுப்பாகி உள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பும், பாஜக தரப்பில் இணக்கமாக செல்வார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. மற்றொருபுறம், ஓபிஎஸ் விவகாரத்தில், தன் பிடிவாதத்தை தளர்த்தி கொள்ள எடப்பாடி தயாராக இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.

நடக்க போகும் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை களமிறக்குகிறது.. ஆனால், தமாகாவுக்கு தொகுதியை ஒதுக்கும்படி, கேட்டுக் கொண்டும் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லையாம்.

பாஜகவை கலந்தாலோசிக்காமல் வேட்பாளரையும் அறிவித்துவிட்டதால், பாஜக கையை பிசைந்து நின்றுள்ளது.. "இலை இல்லாவிட்டால் திமுகவுக்குதான் சாதகமாகிவிடும், அதனால் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும்.. நமக்கு ஓபிஎஸ், தினகரன், சப்போர்ட் இருக்கிறது. வேட்பாளரை அறிவிக்கலாம்" என்றும் சீனியர்கள் சொன்னார்களாம்.

ஸ்பீடு அண்ணாமலை

ஸ்பீடு அண்ணாமலை

அதையும் மாநில தலைமை கவனத்தில் கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.. எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக மாநில தலைமை தொடர்ந்து செயல்படுவதாக அமித்ஷா வட்டாரத்துக்கு ஓபிஎஸ் தகவல் அனுப்பிவிட்டாராம்.. இதன் விளைவாகவே, அண்ணாமலை அவசரமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். தன் தரப்பு விளக்கத்தை அங்கு தந்துவிட்டு, உடனடியாக தமிழகம் திரும்பிய வேகத்திலேயே 2 தரப்பையும் நேற்று காலை சந்தித்து பேசினாராம் அண்ணாமலை.. "அதிமுகவை ஒருங்கிணைக்கவே பாடுபடுகிறோம்" என்று பேட்டிகளை தந்ததும் அதன் விளைவாகத்தான் என்கிறார்கள்..

நோ நோ

நோ நோ

எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை & தரப்பு சந்தித்தபோது, பலருக்கும் இந்த சந்திப்பு ஆச்சரியப்படுத்தியது.. ஆனால் அவர்களை சந்தித்து முடித்துவிட்ட கையோடு ஓபிஎஸ்ஸையும் சென்று சந்தித்தது குழப்பத்தை தந்துவிட்டது.. அப்படியானால் பாஜக யாருக்குதான் ஆதரவு தரப்போகிறது? என்ற கேள்வியும் கிளம்பியது.. இரு தரப்பையும் சமாதானப்படுத்தவே, அண்ணாமலை தரப்பு முயன்றதாக கூறப்பட்டு வருகிறது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுக்கு வெளிப்படையாகவே "நோ" சொல்லும் முடிவுக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டாராம்.. ஆனால், "அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்" என்று அண்ணாமலை கூறியிருந்தது அதிமுக வட்டாரத்தை ரொம்பவே சூடாக்கிவிட்டதாம்...

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

அதனால்தான், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், "நாங்கள் பலமாகத்தான்" இருக்கிறோம் என்று பதிலடி தந்தாராம். எடப்பாடியை பாஜக தலைவர்கள் நேற்றைய தினம் சந்தித்துவிட்டு கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே, பொன்னையனும் காட்டமான பேட்டி தந்திருந்தார்.. "பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்" என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்.. ஆனாலும் மத்தியஸ்தம் செய்து, அதிமுகவையே மீட்டெடுக்க பாடுபடுவதுபோலவும், ஒன்றுசேர்ப்பது போலவும், பாஜக தன்னை காட்டிக் கொள்வது, அதிமுகவை கடுப்பாக்கி வருகிறதாம்.

மத்தியஸ்தம்

மத்தியஸ்தம்

"நாங்கள் பலமாகத்தான் இருக்கிறோம். ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்... அதனால் பாஜகவினர் எங்களைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்... முடிந்தால், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா போன்றவர்களை மறுபடியும் பாஜகவில் சேர்க்கமுடியுமா என்று பாருங்கள்.. கேசவ விநாயகனுக்கும் உங்களுக்கும் இருக்கிற பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா என்று பாருங்கள்... கமலாலயத்தில் இருக்கும் அமைச்சர் எல்.முருகனின் வார் ரூமுடன் இருக்கும் மனக்கசப்புகளை மறக்க பாருங்கள். இதையெல்லாம் சரிசெய்துவிட்டு எங்களுக்கு மத்தியஸ்தம் பண்ண வரலாம் என்று பொருமலும் எழுந்து வருகிறதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+