SIR.. விடக்கூடாது.. வீடு வீடாக செல்லுங்கள்.. ஸ்டாலின் போட்ட உத்தரவு.. திமுகவின் மாஸ்டர்பிளான் ரெடி
சென்னை: SIR பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆளும் திமுக தீவிரமாக திட்டமிட்டு வருகிறதாம். இதற்காக தீவிரமாக திமுக காய் நகர்த்த திட்டமிட்டு வருகிறதாம்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 15.18% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.

சென்னையில் அதிகம் நீக்கம்
தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு மாதமாக SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டன. SIR பணிகள் முடிந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் 97 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னதாக சார் பணிகளின் தேதி தமிழ்நாட்டில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 14 வரை வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் சென்னை மாவட்டத்தில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், சார் பணிகளில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 35% நீக்கப்பட்டுள்ளனர்.
மூன்றில் ஒரு பகுதியினர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 14,25,018 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக 12,22,164 பேர் இடம் மாறியவர்கள் என்பதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் பிளான்
SIR பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆளும் திமுக தீவிரமாக திட்டமிட்டு வருகிறதாம். இதற்காக தீவிரமாக திமுக காய் நகர்த்த திட்டமிட்டு வருகிறதாம். விடுபட்டவர்கள் எல்லோரையும் மீண்டும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்பதில் ஆளும் திமுக தீவிரமாக இருக்கிறதாம்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் காணொலிக் கூட்டத்தை நடத்துகிறார். மாநில சிறப்பு திருத்தப் பணிக்குப் (SIR) பின் வெளியான இப்பட்டியல் மீதான கட்சியின் எதிர்வினையைத் தீவிரப்படுத்தும் நோக்கில் மாலை 6 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும். துரைமுருகன் அறிவுறுத்தலின்படி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு திருத்தப் பணி (SIR) நவம்பரில் தொடங்கி, வாக்காளர் படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டன. படிவ சமர்ப்பிப்பு காலக்கெடு டிசம்பர் 4ம் நாளிலிருந்து, அதிக பங்கேற்பிற்காக டிசம்பர் 11 மற்றும் 14 என இருமுறை நீட்டிக்கப்பட்டது. களப்பணிகள் முடிந்ததும், தேர்தல் ஆணையம் டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
அதிகாரிகள் தகவல்படி, இத்திருத்தப் பணியில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், தகுதியற்றோர் உள்ளிட்ட சுமார் 97.37 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, இரட்டிப்பை நீக்குதல், நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதே தங்கள் நோக்கம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
திமுக பிளான்
இருப்பினும், ஆளும் தி.மு.க. இத்திருத்தத்தின் அளவு மற்றும் முறை குறித்துக் கடும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளது. இச்செயல்முறை குறைபாடுடையது என்றும், உண்மையான வாக்காளர்களுக்குப் பாதிப்பை எற்படுத்தக்கூடும் என்றும் கட்சி விமர்சித்துள்ளது. பெரிய அளவிலான நீக்கங்கள் குறிப்பிட்ட பகுதிகள், சமூகத்தினரைப் பாதித்து, ஜனநாயக பங்கேற்பை அச்சுறுத்தும் என தி.மு.க. குற்றம் சாட்டுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தி.மு.க.வின் அடுத்தகட்ட உத்திகள் குறித்து விவாதிக்கப்படும். ஆட்சேபனைகளைத் தெரிவிப்பது, தொகுதிவாரியாக நீக்கப்பட்ட பெயர்களை ஆய்வு செய்வது, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிப்பது ஆகியவை இதில் அடங்கும். இந்த விவகாரம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறும்.
கிட்டத்தட்ட ஒரு கோடி பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், கோரிக்கைகள், ஆட்சேபனைகள் இன்னும் திறந்திருப்பதால், இறுதிப் பட்டியல் கூடுதல் ஆய்வுக்குப் பின் வெளியாகும். வாக்காளர் தகுதி, தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறப்புத் திருத்தப் பணிகள் ஆகியவை 2026 தேர்தலை நோக்கி தமிழக அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications