Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல.. சிங்களர்களுக்கும் உதவ தயார்.. சட்டசபையில் ஸ்டாலின் திட்டவட்டம்

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆற்றிய பணிகளை அனைவரும் நன்கு அறிவீர்கள். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி. சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு..

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    Sri lanka crisis: Humanitarian assistance to all Sri Lankans says MK Stalin

    இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு இலங்கை வெளிநாடுகளை நம்பி, அங்கிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனை மேற்கொள்ள போதுமான பணம் டாலரில் இல்லாததால், பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விலையானது பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தொட்டுள்ளது. பச்சை மிளகாய் விலையோ கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    குழந்தைகளுக்கு பால் பொருட்கள் கூட வாங்க முடியாத அளவிற்கு விலை உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இலங்கை மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது ஒரு பக்கம் என்றால் இலங்கையில் குழந்தைகளுடன் வாழ முடியாமல் தினந்தோறும் தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

    உணவு இல்லாமல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் நிவாரண பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு உறுதியோடு உள்ளதாகவும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதி செய்து தருமாறும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக எந்தவித அனுமதியும் வழங்காத நிலையில், தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

    சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆற்றிய பணிகளை அனைவரும் நன்கு அறிவீர்கள். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் குறிப்பிட்டார்.

    இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி கடிதம் எழுதியும் அனுமதி கிடைக்கவில்லை. தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சேர்த்தே உதவ தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். அனைவரும் கட்சி பேதம் பாராமல் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+