இந்தியாவுக்கான இலங்கை தூதர், முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு! மீனவர் விவகாரம் குறித்து பேச்சு
சென்னை: இந்தியாவுக்கான இலங்கை தூதர் மலிந்தா மொரகோடா இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மீனவர் விவகாரம், இலங்கை-தமிழகம் இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இலங்கைக்கு இந்தியா சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசு சார்பிலும் இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் இன்று சென்னை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்தியாவிற்கான இலங்கை தூதர் மலிந்தா மொரரகோடா சந்தித்து பேசினார். அப்போது மீனவர் விவகாரம் மற்றுமு் இலங்கை தமிழகம் இடையேயான உறவு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications