அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. திமுகவிடம் மல்லுக்கட்டி கடந்த முறையை விட கூடுதலாக 3 சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மேலிட தலைவர்கள் இன்னும் பிரசாரம் செய்ய வரவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் அப்செட்டில் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் அனைவரும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் தற்போது வரை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி யாருமே தமிழகத்துக்கு பிரசாரம் வரவில்லை. அவர்கள் பிரசாரம் செய்ய வருவார் என்று மிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறியிருந்தாலும் கூட இன்னும் அதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
பிரசாரத்துக்கு வராத காங்கிரஸ் தலைகள்
இது திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தொகுதி பங்கீட்டின்போது திமுகவிடம் மல்லுக்கட்டி கடந்த முறையை விட கூடுதலாக 3 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடுகிறது. இப்படியான சூழலில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பிரசாரத்துக்கு வராதது திமுகவை அப்செட்டாக்கி உள்ளது. திமுக மட்டுமின்றி காங்கிரஸ் வேட்பாளர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
அதுமட்டுமின்றி திமுகவிடம் மல்லுக்கட்டிய காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் அதிக இடங்களில் வென்று பலத்தை நிரூபிக்க துடிக்கின்றன. இதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பிரசாரம் வலு சேர்க்கும். ஆனால் அவர்கள் மவுனமாக தமிழகத்தை புறக்கணித்து வருகின்றனர். இது திமுகவிடம் மல்லுக்கட்டிய காங்கிரஸ் தலைவர்களை சோர்வடைய செய்துள்ளது.
ராகுல் காந்தி வருவது சந்தேகம்?
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட சில எம்பிக்கள் பிரசாரம் செய்தாலும் கூட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பரப்புரை என்பது அதிக பலனை தரும். இதனால் அவர்கள் நிச்சயம் தமிழகம் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தற்போது அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்கிடையே தான் நாளை முதல் வரும் 18 ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கன 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவு பற்றிய விவாதம் தொடங்குிறது. இதனை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பிரசாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஒருவேளை ராகுல், பிரியங்கா ஆகியோர் பிரசாரம் செய்ய விரும்பினால் ஏப்ரல் 19, 20, 21 ஆகிய தேதிகளில் வரலாம். ஆனால் தற்போது அதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ராகுல் காந்தி தவிர்ப்பது ஏன்?
ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்யாமல் இருப்பதன் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பிரச்சனை. 2வது தொகுதி பங்கீட்டின்போது திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியை நடத்திய விதத்தால் முதல்வர் ஸ்டாலின் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போதும் கூட ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உடன் மேடையை பகிர்ந்து கொள்ளவில்லை.
முதல்வர் ஸ்டாலின் அப்செட்
எது எப்படியோ.. தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை 25 தொகுதிகள் வாங்கி 18 ல் வென்றது. இந்த முறை 28 வாங்கி உள்ளது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரஸ் கட்சி அடுத்த முறை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெற முடியும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் தோல்வியடையும்போது அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம். இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது முதல்வர் ஸ்டாலினும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி















Click it and Unblock the Notifications