பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை.. அமலுக்கு வந்த சட்டம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது அந்த சட்டங்கள் ஜனவரி 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் வகையிலான 2 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றினார். அந்த சட்டத்தின் அடிப்படையில், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

அதேபோல் ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வடை சிறை தண்டனையும் பெற்று கொடுக்க முடியும். குறிப்பிடட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது.
அதேபோல் பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கில் தாக்கும் குற்றத்திற்கு, இனி 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரால் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு, தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்த குற்றத்திற்கான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.
இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications