ஆன்லைனில் Indane கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாமல் 2 நாளாக பொதுமக்கள் அவதி- மாற்று ஏற்பாடுகள் என்ன?
சென்னை: இண்டேன் நிறுவன சிலிண்டர்களை ஆன்லைனில் புக் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இண்டேன் சிலிண்டர்களை புக் செய்யும் இதர வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நமது நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ1,000-த்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த காலங்களைப் போல இல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உடனுக்குடன் கிடைத்துவிடவும் செய்கிறது. ஆன்லைன், வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்வது, ஆன்லைனிலேயே பணம் செலுத்துவது என வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இணையதளத்தில் இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்ய முடியவில்லை என்பது பொதுமக்களின் புகார். கடந்த 2 நாட்களாக இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆன்லைனில் புக் செய்ய முடியவில்லை. This site can't be reachedcx.indianoil.in took too long to respond என்பது மட்டுமே பதிலாக கிடைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தவித்து போயுள்ளனர்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இண்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு மற்றும் விநியோகம் செய்வதில் கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்தது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய ஐபிஎம் மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பயனாளர்கள் வழக்கம்போல் தங்களது கேஸ் சிலிண்டர் பதிவை:
எஸ்எம்எஸ் அல்லது ஐவிஆர்எஸ் எண் 77189 55555
மிஸ்டுகால் 84549 55555 அல்லது
வாட்ஸ் அப் மூலம் 75888 88824
விநியோகஸ்தர்களை நேரிடையாகவோ அல்லது கேஸ் பில்லில் உள்ள தொலைபேசி எண் வாயிலாக நுகர்வோர்கள் தொடர்பு கொண்டு மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களின் பதிவு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கூடிய விரைவில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும்.
இன்று மாலைக்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு நாளை முதல் வழக்கம் போல் சேவைகள் தொடரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு எந்த பதிலும் மெசேஜும் வரவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications