ஜாக்பாட் கொடுத்த தமிழ்நாடு அரசு! ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட தொகுப்பூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியாளர்கள் கடந்த சில காலமாகவே ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதற்கிடையே தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2021 தேர்தல் அறிக்கை சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பணி நிரந்தரம் கோரி தொகுப்பூதியப் பணியாளர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசு இதுவரை இந்த விவகாரத்தில் முடிவு எதுவும் எடுக்கவில்லை

இதற்கிடையே தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் முழுநேரத் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர்கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் என்பது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications