Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 3 மணிநேரம்.. 6 மாவட்டங்களில் இடியுடன் வெளுக்கும் மழை.. எங்கெங்கு?.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் கூட பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் சூரியனை பார்க்க முடியாத நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

உருவாகிய காற்றழுத்தம்

உருவாகிய காற்றழுத்தம்

இந்நிலையில் தான் தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஓய்வெடுத்த மழை மீண்டும் தீவிரம் காட்டலாம் என கூறப்படுகிறது. அதாவது தற்போது வங்க கடலின் வடக்கு அந்தமான் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

நேரடி தாக்கம்

நேரடி தாக்கம்

மேலும் கேரள பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைபெய்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிக்கு நெருங்கி வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். .

 அடுத்த 3 மணிநேரம் முக்கியம்

அடுத்த 3 மணிநேரம் முக்கியம்

இந்நிலையில் தான் இன்று காலை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலைஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேலும் இன்று முதல் நவம்பர் 19ம் தேதி வரை தமிழகம் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச உள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச உள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+