அடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக
Recommended Video
சென்னை: சமீப காலமாக தமிழக, பாஜக ஐடி விங் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. தமிழக பாஜகவின் ட்விட்டர் கணக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில வாரங்களாக மிகமிக ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சியினரை வலி சென்று வம்பு இழுத்து விமர்சனக் கணைகளை தொடுத்து வருகிறது தமிழக பாஜக ட்விட்டர் அக்கவுண்ட். குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சி தலைவர்களையும் குறிவைத்து அவர்கள் டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து, கேலியும், கிண்டலும் செய்து, பாஜக ஆதரவாளர்களுக்கு கலகலப்பூட்டி வருகிறது.

இப்போது இவர்களிடம் சிக்கி உள்ளது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற ஸ்டாலின், தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் அசுரன் திரைப்படத்தையும் கண்டு ரசித்து அதை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.
அசுரன் திரைப்படம் சொல்லும், கருத்துக்கு தனது பாராட்டையும் தெரிவித்து இருந்தார். பஞ்சமி நில மீட்பு தொடர்பாக அசுரன் படம் பேசுவதாக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுகவின் முரசொலி நாளிதழ் அலுவலகம், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட இடம் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து ட்வீட் செய்தார். தமிழக பாஜக, ஒரு படி மேலே சென்று, ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட்ட அந்த படத்தில், ஸ்டாலினை சிவப்பு கலரால் 'வட்டமிட்டு' அவரின் அருகே யாரையும் இருக்க விடவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 17, 2019
செய்தொழில் வேற்றுமை யான்"
பிறப்பால் மட்டுமின்றி மனதாலும் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் ஒன்றே என அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் செயல் புரிபவரே சிறந்த மனிதன்.
அத்தகைய செயல் புரியாதோர் எந்த சிறப்பியல்பும் அற்ற மேன்மை இல்லாதவர் ஆவர். pic.twitter.com/26GQfRgZYi
ஸ்டாலின் தியேட்டரில் அமர்ந்திருந்த இருக்கைக்கு இருபக்கமும் உள்ள இருக்கைகளில் துண்டுபோடப்பட்டு, இருந்தது. அதற்கு அடுத்த இருக்கைகளில்தான் திமுக நிர்வாகிகள் வரிசையாக அமர்ந்து இருந்தனர். தனது பக்கத்தில் வேறு யாரும் அமர்ந்து விடக்கூடாது என்ற ஸ்டாலினின் ஏற்பாடுதான் இது என்று தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" அதாவது, பிறப்பால் மட்டுமின்றி மனதாலும் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் ஒன்றே என அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் செயல் புரிபவரே சிறந்த மனிதன். அத்தகைய செயல் புரியாதோர் எந்த சிறப்பியல்பும் அற்ற மேன்மை இல்லாதவர் ஆவர். இவ்வாறு, திருக்குறளை குறிப்பிட்டு, ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளது.
முன்னதாக, ப. சிதம்பரத்தை, சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லக் கூடிய படத்தை வெளியிட்டு, அதில், "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று" என்ற திருக்குறளை உதாரணமாகச் சொல்லி விமர்சனம் செய்திருந்தது தமிழக பாஜக.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications