சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்த ஸ்டாலின்.. யார், யாருக்கு விருது?.. முழு விவரம்!
சென்னை: நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
Recommended Video
நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகாலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோட்டையில் முதன்முதலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்.
இதன்பின்னர் தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் மு.ஸ்டாலின் முதன்முதலாக தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாட்டை இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாற்றியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்தார்.

மருத்துவர் சண்முகப்பிரியா
இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் விவரம் பின்வருமாறு:- கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. சண்முக பிரியாவின் கணவர் சண்முக பெருமாள் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். பெற்றார். துணிச்சலான மருத்துவ சேவைக்கான இந்த விருது வழங்கப்பட்டது.

அப்துல் கலாம் விருது
பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த மூன்றாம் பாலினத்தவருக்கான விருது திருநங்கை கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டது. சமூக சேவைக்கு சிறந்த தொண்டாற்றியதற்காக டாக்டர் சாந்தி துரைசாமிக்கு ஔவையார் விருது வழங்கப்பட்டது. 3 பேருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. சென்னை மாநில கல்லூரிக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், நில நிர்வாக ஆணையர் ஜெ.பார்த்திபனுக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சிறந்த தொண்டு நிறுவனம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருச்சி ஹோலி கிராஸ் தொண்டு நிறுவனத்துக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்ததற்காக மருத்துவர் விருது சென்னை பத்மபிரியாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது நெல்லையை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தஞ்சாவூருக்கு விருது
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை, சாயல்குடி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. உதகை(முதல் பரிசு), திருச்செங்கோடு(2-ம் பரிசு) , சின்னமனுருக்கு(3-ம் பரிசு) சிறந்த நகராட்சிகளுக்கான விருது வழங்கப்ட்டது. சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூருக்கு விருது வழங்கப்பட்டது. இது தவிர சாதனை புரிந்த பல்வேறு தரப்பினருக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications