23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 50 வயதுக்கு உட்பட்ட 42 பேர் 167 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலின் வேகம் ஒரு வாரத்தில் 10% மேல் அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவல் படுவேகமாக அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை அமலுக்கு வரும் நிலையில் வைரஸ் பரவல் மெல்லக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 23,310 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 21,228 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 24 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 12,72,602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு
மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 94 பேர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 73 பேர் என மொத்தம் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று இணை நோய்கள் இல்லா 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 வயதுக்கு உட்பட்ட 42 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழ்பு 14,779 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் வயதானவர்களே உயிரிழப்பதாகச் சொல்லப்பட்ட வந்த நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கிறது. தற்போது மாநிலம் முழுவதும் 1,28,311 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து 20,062 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 11,29,512 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6291 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் ஒரே நாளில் 58 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவையில் ஒரே நாளில் 2029 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1755 பேருக்கும், திருவள்ளூரில் 1385 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications