விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி
சென்னை: தமிழகத்தில் கெயில் எண்ணெய்க் குழாய் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பதிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தின் போது திமுக உறுப்பினர் சபா ராஜேந்திரன் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கெயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை தடுக்க வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழக அரசு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் செயல்படுவதாக குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி அவர்களுக்கு எந்தவித பாதிப்புமின்றி, கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதிபட கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் தமிழகத்தை பொருத்த வரை 312 கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணி கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது.
எண்ணெய் குழாய்கள் பதிக்க தோண்டப்படும் பள்ளம் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர், நிலங்களை சமன் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதே போல புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உடன்பாட்டின் படி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அரசாணையை போல, தமிழகத்திலும் அரசாணை வெளியிட தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications