தொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. 3வது நாளாக இன்றும் விலையில் மாற்றமில்லை
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 70 ரூபாய்க்கு விற்று வந்த பெட்ரோல் விலை சரசரவென உயர்ந்து தற்போது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதில் மத்திய அரசின் வரி காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆசியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் விற்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 105.25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 95.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 107.83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் விலை 101.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 89.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.81 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை 102 -103 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications