ஆபாசமாக பேசி கோடி, கோடியாக சம்பாதித்த.. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கம்!
சென்னை: ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Recommended Video
பப்ஜி ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்துவந்ததாக யுடியூபர் பப்ஜி மதன் மீது 150-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.
சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதுடன் மட்டுமில்லாமல் தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கி கோடி, கோடியாக பணம் சம்பாதித்துள்ளார் யுடியூபர் மதன்.

பப்ஜி மதனின் சித்து விளையாட்டு
சென்னையில் பங்களா, 2 சொகுசு கார்கள் , மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் ரூ.4 கோடி பணம் என்று பப்ஜி மதனும், அவரது மனைவி கிருத்திகாவும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆபாச பேச்சுக்கள் பேசி மற்றவர்களிடம் பணம் கறப்பதற்காக உடைந்தையாக இருந்த பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர்.

அதிரடி கைது
''தன்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது'' என்று தொடர்ந்து போலீசாரிடம் தொடர்ந்து தண்ணி காட்டி வந்த பப்ஜி மதனையும் தர்மபுரியில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து பப்ஜி மதனிடம் விடிய, விடிய விசாரணை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள்.

பல கோடிகள் சம்பாதித்தனர்
பப்ஜி விளையாட்டு வாயிலாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் மனதில் விஷத்தை விதைத்த 'யு டியூபர்' மதன், போலீசாரிடம் ஆபாசமாக பேசி நடித்துக் காட்டினார். குறுகிய காலத்தில், கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று திட்டமிட்டு ஆபாசமாக பேசி தானும், தனது மனைவியும் பல கோடிகள் சம்பாதித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் மதன்.

யூ-டியூப் சேனல்கள் முடக்கம்
தற்போது கணவனும்,மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் யூ டியூபர் மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். முதலில் 8 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. பப்ஜி மதன் கேர்ள்; மதன் 18 பிளஸ் உள்ளிட்ட 2 சேனல்கள் முடக்கப்ட்டுள்ளதாகவும், மீதி உள்ள யூ-டியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications