ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில், அது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

குடும்ப அட்டைகளில் உள்ள பல்வேறு குளறுபடிகளுக்கு தீர்வு காண முடியாமல் தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுதமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும், அத்தியாவசிய உணவுத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகளின் சேவைகளை மக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தடையின்றி பெறுவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் நீண்டகால புகார்கள் மற்றும் அதிருப்திகளை நேரடியாகக் கேட்டு, அதற்கு உடனுக்குடன் ஸ்பாட்டிலேயே தீர்வு காண்பதற்கான பிரத்யேக குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் அறிவிப்பு

ஜூன் 2026 மாதத்திற்கான இந்த மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் வரும் 13.06.2026 அன்று மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டுமே இந்த முகாம் செயல்படும் என்பதால் பொதுமக்கள் நேரத்தை சரியாக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

இந்த அதிரடி முகாமில் ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் குடும்ப அட்டைகளில் நீண்ட நாட்களாக மாற்ற முடியாமல் இருக்கும் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மற்றும் மிக முக்கியமாக கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எவ்வித அலைச்சலும் இல்லாமல் உடனே செய்து கொள்ள முடியும்.

சனிக்கிழமை நடைபெறும் முகாம்

இதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வந்து பொருட்களைப் பெற முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்களது சார்பாக வேறு நபர் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரச் சான்றும் இந்த முகாமிலேயே நேரடியாக வழங்கப்பட உள்ளது.

மேலும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள், தரம் குறைந்த பொருட்கள் வழங்கப்படுவது பற்றிய அதிருப்திகள், அல்லது தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள குறைபாடுகள் என நுகர்வோர் சார்ந்த எந்தவொரு புகாரையும் பொதுமக்கள் இந்த முகாமில் அதிகாரிகளிடம் நேரடியாக மனுவாக அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது மிக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அதிரடி

இந்த முகாமில் பங்கேற்க வரும் பொதுமக்கள் ஒரு மிக முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். குடும்ப அட்டைகளில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் மற்றும் சேவைகளும், கார்டுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் ஓடிபி வழியாக மட்டுமே தகுதி சரிபார்க்கப்பட்டு மேற்கொள்ளப்படும்.அதனால் பொதுமக்கள் இந்த முகாமிற்கு வரும்போது தங்களது ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் போனையும் கண்டிப்பாக கையோடு எடுத்து வர வேண்டும் என்று சென்னை உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல அலுவலகங்கள் மூலமாக கடுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் எல்லைக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி தங்களின் ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+