பெரும் பாய்ச்சல் நிகழ்த்தும் திமுக.. 175 இடங்கள் வரை வெல்லும்.. "டுடேஸ் சாணக்யா" எக்சிட் போல்!
சென்னை: தமிழகத்தில் 175 இடங்கள் வரை திமுக வெல்லும் என்று டுடேஸ் சாணக்யா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்களும், கருத்து கணிப்பு மையங்களும் வெளியிட்டு வருகின்றன.

ஏபிபி சி வோட்டர், ரி பப்ளிக் என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. பொதுவாக தேர்தல் கணிப்புகளுக்கு பெயர் போன டுடேஸ் சாணக்யாவும் தமிழகம் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
டுடேஸ் சாணக்யாவின் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக 175 இடங்களை வெல்லும். அதிமுக 57 இடங்களை வெல்லும். இதர கட்சிகள் 2 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி திமுக மிகப்பெரிய வெற்றியை இந்த சட்டசபை தேர்தலில் பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று டுடேஸ் சாணக்யா கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications