கண்டுக்காதீங்க.. இப்போதைக்கு பெரிசா பிரச்சினை இல்லை.. சென்னைவாசிகளுக்கு ஆறுதல் தந்த வெதர்மேன்!
சென்னை: புதிய காற்றழுத்தம் வட தமிழகத்திற்கு வந்தாலும் சென்னைக்கு பெரியதாக மழை ஏதும் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த காற்றழுத்தம் புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பரவலாக மிக கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அந்தமான்
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்தது. அதன்படி 13 ஆம் தேதி அந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. ஆனால் இந்த காற்றழுத்தம் வரும் 18 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தீவிரமடையும் என சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இது இரு வேறு விதமாக பயணிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். முதலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி புயலாக மாறி, ஒரே தீவிரத்தன்மையுடன் இருந்தால் அது மேற்பகுதியில் நகர்ந்து மத்திய மற்றும் வடக்கு ஆந்திராவின் மேற்கு, வடமேற்கு திசையில் உயர்ந்த காற்றால் நகரும். இன்னொன்று அந்த குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகவோ புயலாகவோ மாறினால், அது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து குறைந்த காற்றால் தெற்கு ஆந்திராவுக்கோ அல்லது வட தமிழகத்திற்கோ செல்லும் என தெரிவித்திருந்தார்.

வெள்ளம்
வடதமிழகம் என்றவுடன் ஏற்கெனவே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு ஒரு வாரம் ஆகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் உள்ளதால் சென்னை மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னைக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயத்தையும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ரேடாரை பொருத்தவரை புதிய காற்றழுத்தம் உருவானதை சுற்றியுள்ள பகுதிகள் பச்சை நிறமாகவே இருக்கிறது.

நெல்லூர்- காவாலி
தெற்கு ஆந்திராதான் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. நெல்லூர்- காவாலி இடையே வடசென்னை அருகே மேகக் கூட்டங்கள் குவிந்துள்ளன. இவை வடதமிழகத்தின் பக்கம் நகர்ந்து வந்தால் தற்போதைய சூழலில் சென்னையில் மிகப் பெரிய மழை எல்லாம் இருக்காது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் காற்று குவிதலால் மழை மேகங்கள் வடமேற்கு பக்கம் செல்லும். இதில் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தற்போதைய சூழலில் சென்னைக்கு பெரிய மழை என்பதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications