Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலி பண்ணா இவ்வளவு பணம் போகுமா? வாடகைதாரரை அசரடித்த பெங்களூர் ஹவுஸ் ஓனரின் வசூல் கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூருவில் வீடு வாங்குவது, வீட்டு வாடகை, உரிமையாளர்கள் போடும் கண்டிஷன்கள், நகரத்தில் ஏற்படும் செலவுகள் என பலவும் அடிக்கடி சமூகவலைத்தளத்தில் விவாதத்துக்கு உள்ளாகி விடுகிறது.. இதுபோன்ற சம்பவங்கள், வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு இடையேயான நம்பிக்கையின்மை மற்றும் நியாயமற்ற கட்டண வசூல் குறித்த கேள்வியை உண்டுபண்ணி விடுகின்றன.. இதோ மற்றொரு வாடகைதாரர் தனது அனுபவத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்..

சென்னையை போலவே பெங்களூரிலும் வாடகைக்கு வீடு வாங்கி தருவதாக சொல்லி, பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.. காரணம், பெங்களூரில் ஆயிரக்கணக்கானோர் வேலை, படிப்பு, மருத்துவ சிகிச்சை என பெங்களூரில் தங்கி இருக்கிறார்கள்.. இவர்களுக்கு வாடகைக்கு வீடு தேவைப்படுகிறது.

Bangalore Tenant Landlord Security Deposit Exorbitant Charges Rental Nightmare House Owner Scam Painting Deduction Cleaning Fees

செக்யூரிட்டி டெபாசிட்

ஆனால், வாடகைக்கு வீடு வேண்டுமானால், 'செக்யூரிட்டி டெபாசிட்' செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்களாம்.. அப்படி செலுத்தப்படும் டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்படுவதும் இல்லையாம். அல்லது வீட்டிலுள்ள செலவுகளை காரணம் காட்டி அட்வான்ஸ் பணத்தை கழித்து விடுகிறார்களாம்.

எனவேதான், சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, இதுபோன்ற ஆன்லைன் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். ஆனாலும், பெங்களூருவில் மோசடிகள் நடந்தவண்ணம் உள்ளன. இதோ இந்த விசித்திர சம்பவத்தை பாருங்கள்

வாடகை வீட்டுதாரர்

பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர், வீட்டை காலி செய்துள்ளார்.. அப்போது வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் பணத்திலிருந்து ஏகப்பட்ட பணத்தை பிடித்து கொண்டாராம்.. அதாவது பெயிண்ட் அடித்தல், கிளீன் செய்வது, போன்ற பணிகளுக்காக அட்வான்ஸ் தொகையிலிருந்து ரூ.51,000க்கு மேல் அதிரடியாக பிடித்தம் செய்துள்ளார்.

இதுகுறித்துதான் அந்த நபர் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.. "வீட்டு உரிமையாளரிடம் சாவியை ஒப்படைப்பதற்கு முன்பே, கதவுகள் உட்பட மொத்த வீட்டையும் மறுபடியும் பெயிண்ட் பூச வேண்டும் என்று கண்டிஷன் போட்டார் ஹவுஸ் ஓனர்.. பெயிண்ட் பூசுபவரும் வந்து வீட்டை பார்த்தார்..

"வாடகைதாரர் இன்னும் குடியிருப்பில் உள்ளதால், வேலை அதிகமாக இருக்காது, மொத்த செலவு ரூ.20,000க்கும் குறைவாகவே இருக்கும்" என்று என்னிடம் தெரிவித்திருந்தார். பிறகு பெயிண்ட் பூசுபவரிடம் நேரடியாக வீட்டு உரிமையாளர் பேசினார்..

பெயிண்ட் அடிக்க செலவு

அதன் பிறகு, திடீரென பெயிண்ட் செலவு எதிர்பாராத விதமாக ரூ.36,000 ஆக உயர்ந்தது.. என்னிடம் கலந்தாலோசிக்காமல், என்னிடம் எதுவுமே சொல்லாமல் இந்த முடிவை ஹவுஸ் ஓனர் எடுத்துள்ளார்.. மேலும் மொத்த வேலையையும் துவங்கி, சொன்னபடியே 36000 ரூபாயையும் எடுத்து கொண்டனர்.. பெயிண்ட் பூசுவதோடு மட்டுமல்லாமல், டீப் கிளீனிங் செய்வதற்கு ரூ.10,000 பிடித்தம் செய்து கொண்டார்கள்..

பெங்களூருவில் 3BHK பிளாட்டுக்கு இப்படி சுத்தம் செய்ய பொதுவாக ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை மட்டுமே செலவாகும், இந்த ரூ.10,000 கட்டணமும் மிகவும் அதிகமாகத் தெரிகிறது. மேலும், ரூ.5,000 அட்வான்ஸ் பணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் வட அமெரிக்காவில் வசிப்பதால், புதிய வாடகைதாரர் அங்கு குடியேறிய 2 வாரங்களுக்குப் பிறகு ஏதேனும் கூடுதல் சேதம் கண்டறியப்பட்டால் மட்டுமே இந்த தொகை திருப்பித் தரப்படும் என்று நிபந்தனையும் விதித்துவிட்டார்..

ஹவுஸ் ஓனர்

முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்ட இத்தகைய முடிவுகளால் இந்த பிடித்தங்கள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்துவிட்டன.. அதிர்ச்சியடைய செய்துவிட்டன" என்று கண்ணீர் விடாத குறையாக பதிவிட்டுள்ளார்..

இதை பார்த்த இணையவாசிகள், தங்களது வாடகை வீட்டு அனுபவங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.. பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் கொடுக்கும் வாடகைக்கு சொந்த வீடு வாங்கி EMI கட்டிவிட்டு போயிடலாம் என்றே தோன்றுகிறது என்று நொந்து போய் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+