சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிய குற்றவாளி.. போலீஸ் கொடுத்த ஷாக்
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி கழிவறை வழியாக தப்பி சென்ற மூன்று மணி நேரத்தில் போலீசார் மீண்டும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஷபி என்கிற முகமது ஷபி இவர் திருட்டு வழக்கில் ஒன்றில் வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்

தப்பி சென்றார்
இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது கைதிகள் வார்டில் உள்ள கழிவறையில் உள்ள பராமரிப்பில்லாத வெண்டிலேட்டர் வழியாக துருப்பிடித்த இரும்பை அகற்றி அதன் வழியாக தப்பிச் சென்றுள்ளார்.

அதிர்ச்சி
வெகுநேரமாகியும் வெளியே வராததால் பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிவறையை உடைத்து பார்த்தபோது உள்ளே ஷபி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பதுங்கிய குற்றவாளி
உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மூன்று மணிநேரத்தில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள பூங்காவில் பதுங்கியிருந்த ஷபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தப்பிய கைதி
அரசு ஸ்டான்லி பொதுமருத்துவமனையில் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் பணிகளும் முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்து உள்ளதை கைதிகள் பயன்படுத்தி இவ்வாறு தப்பித்து வருவதை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

விபத்து காட்சி
ஒசூர் அருகே லாரிக்கு அடியில் சிக்கிக்கொள்ளும் இருசக்கர வாகனம்: நெஞ்சை பதபதவைக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் பெரியார் நகரை சேர்ந்த டேனியல் ரூபன் என்பவர், இருசக்கர வாகனத்தில் மேலும் இரண்டு பெண்களை அமர வைத்துக்கொண்டு பாகலூர் - ஒசூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் சென்றபோது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது, பின்புறமாக வந்த லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனத்தை லாரி இழுந்து செல்லும் நெஞ்சை பதபதக்க வைக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications