போராளியின் போர் தொடங்கிவிட்டது.. மொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது.. ரஜினிகாந்த் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். போராளியின் போர் தொடங்கிவிட்டது.. மொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மத்திய அரசும் பங்கரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியது.

the-entire-nation-stands-with-prime-minister-modi-rajinikanth-praises-sindhoor-operation

ஆபரேஷன் சிந்தூர்

பிரதமர் மோடியும் காஷ்மீரில் அமைதி நிலவுவதை பயங்கரவாதிகள் விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பதிலடி நிச்சயம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தில் பாடம் புகட்ட வேண்டும் என்று அந்நாடு மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், இந்திய துறைமுகங்களுக்குள் பாகிஸ்தானிய கப்பல்கள் வர தடை என அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டது. மேலும் இன்று நாடு முழுவதும் 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என்றும் அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் மரண பீதியில் இருந்து வந்தது.

25 நிமிடம் தான்

இந்த நிலையில் பாகிஸ்தானே எதிர்ப்பார்க்காத நேரத்தில் நேற்று நள்ளிரவு இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது. சரியாக 25 நிமிடத்தில் இந்த தாக்குதலை கணக்கச்சிதமாக இந்தியா செய்து முடித்தது. பொதுமக்கள் மீது ஏதும் தாக்குதல் நடத்தாமல், பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

ரஜினிகாந்த், விஜய் பாராட்டு

இதனால் உலக நாடுகள் பலவும் இந்தியாவின் இந்த நடவடிக்கையினை பாராட்டியது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்தியாவின் இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கையினை பாராட்டியுள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- போராளியின் போர் தொடங்கிவிட்டது.. மொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது. எடுத்த காரியம் முடியும் வரை ஓயப்போவதில்லை. என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யும் இந்திய ராணுவத்திற்கு ராயல் சல்யூட் என்று பாராட்டியுள்ளார். முன்னதாக இந்தியாவின் இந்த நடவடிக்கையால், அழுது புலம்பும் பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்து உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தவிடுபொடியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருப்பதால் மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் தான் இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெறுகிறது. அமெரிக்கா, ரஷ்யா என உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+